Friday, January 30, 2009

தமிழனே உனக்கு ஒரு தருணம் உன்னுடன் ஒரு நிமிடம் !!!!

>

ஈழ போராட்ட வரலாற்றில் ’’கண்ணீர் துளிகள் ’’ தாரை தாரையாக தமிழ் மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது ஈழத்தில் ’’ரத்த துளிகள்‘’’’’’’’’

தமிழ் மக்களின் உதரத்திலிருந்து ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது .

எல்லோர் மனங்களிலும் சோகம் குடிகொண்டு , தவிப்பு தாண்டவமாடுகிறது.

ஈழத்தில் இன்று வரலாறு காணாத மனிதப்பேரவலம் தலை விரித்து ஆடுகிறது.

சோகமே மயமான விடியல்கள் விடுதலைக்காய் துடிக்கும் மக்கள் மரண ஓலங்கள் , கூக்குரல்கள் , உடம்பில் காயங்கள் ,

இழப்பதற்கு இனியும் ஏதுமற்று இடம்பெயர்ந்து ஓடும்போது இடியென இறங்கும் ஷெல் களினால் இழக்கப்படும் அவயவங்கள் .

இத்தனையும் நிறைந்து காட்சியளிக்கும் ஈழத்தின் கோலம் ஞாலத்தில் வேறு எங்கும் கண்டதுண்டோ

0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER