Tuesday, January 27, 2009

உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது.

அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே!எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை

1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங்கள்.3.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri Lanka: More than 300 killed 1200 injured within a day"

அத்துடன் உங்கள் நாட்டு நண்பர்களுக்கும் இதனை உபதேசம் செய்து அவர்களையும் 2 நாட்களுக்கு இதனை போட செய்யுங்கள். (தமிழர் அல்லாத நண்பர்கள்)வலிகளில் நொந்து கிடந்து அழுவதை விடுத்து வலிகளிலிருந்தும் வலிமை பெறுபவர்களாய் எழுவோம்! எழுவோம்!!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

நன்றி www.Tamiloosai.com

0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER