Sunday, December 20, 2009

சற்று சிந்தியுங்கள் - தமிழனுக்கு தமிழனே துரோகி ..!!!

ஊரே பத்தி எரியுது!!! இதுக்குள்ள விஜயா அல்லது அஜித்தா என்று அடிபாடு வேற நடக்குது. (வீடியோ இணைப்பு) வேடக்காரனைப் பொறுத்தவரையில் விஜய் எப்போதோ சம்பளத்தினை வாங்கி இருப்பார்.
வேடக்காரனைப் பொறுத்தவரையில் விஜய் எப்போதோ சம்பளத்தினை வாங்கி இருப்பார். அவருக்கு இந்தப்படம் ஓடாவிட்டால் பண நட்டம் இலலை. இதனால் பாதிக்கபடப்போவது படத்தை வாங்கிய புலம்பெயர் மக்களேஆனால் அவர் மன்னிப்புக் கேட்காமல் அலட்சியப்படுத்தினால் அவரது 50வது படம் "சுறா" புலம்பெயர் தேசங்களில் நெத்தலி ஆகும்!!!

அப்படி என்ன விஜய் செய்துவிட்டார்?
விஜய் ஈழத்தமிழரின் மருமகன் என்ற நம்பிக்கையினைக் கொடுத்துவிட்டு ராகுலைச் சந்தித்தது தவறு. சந்தித்த நேரம் தவறு. சந்தித்தமுறை ( இரகசியமாய்) தவறு. பின் மாட்டியவுடன் தமிழரைக் கொல்ல உதவிய அந்த நேரத்தில் காங்கிரசின் கொள்கை பிடித்தமையால் சந்தித்தேன் என்று சொன்னது மாபெரும் தவறு!!!

அது ஒருபுறம் இருக்க அன்பர் விஜய் அன்ரனி TN07 AL4777 என்ற படத்தில் "ஆத்திசூடி" என்ற பாடலில் சிங்கள மொழி வரிகளை டினேஷ் கனகரத்தினம் சேர்க்க அனுமதித்து இருந்தார். அதன்பின்னர் அன்பர் அன்ரனி யாழ்பாணத்தில் நடந்த "வடக்கின் வசந்தம்" என்ற சிங்களவர் நடத்திய நிகழ்ச்சிக்கு அந்தக்குழுவுடன் இராணுவக் கெலியில் (மகிந்தவின் மகனுடன்) சென்றிருந்தார். ( விடீயோ இணைப்பு கீழே) அங்கு சென்றவர் பின்னர் இராஜ் வீரறட்ணையுடன் சேர்ந்து வேலை செய்தார். அதில் ஒரு பாடல்தான் "சின்னத்தாமரை". மற்றய பாடல்கள் வெளிவருமாயின் அவர் புலம்பெயர்தேசங்களுக்கு வரக்கூடியதாக இருக்கும் என்பது ஐயம்! அன்பர் ஈழத்தமிழரிடம் மன்னிப்புக் கேட்பது புத்திசாலித்தனம். அவரே முடிவெடுக்கட்டும்.

யார் இந்த இராஜ் வீரறட்ணே? சிங்கள அரசுடன் சேர்ந்து அவர்கள் இராணுவத்தினை தெய்வம் என்று வணங்கும் பாடலை உருவாக்கியவர் அத்துடன் அதில் நடித்தவர். அதுமட்டும் அன்றி "கொத்து" என்ற பாடலில் எங்கள் தேசியத்தலைவரை நையாண்டி செய்தவர். ( தலைவர்போல ஆடிப் பின் வெடித்துச் சிதறுவார். - வீடியோ இணைப்புக் கீழே) இவரும் புலம்பெயர்தேசங்களில் வெளிப்படையாக நடந்து திருவது ஐயம்!


இந்தப்புறக்கணிப்பினால் சொல்லவருவது?

01. இனிமேல் திரைப்படங்களினைத் தயாரிக்கும்பொது சிங்களவர்களை இணைத்து வேலைசெய்யக்கூடாது
02. உலகத்தமிழர் முட்டாள்கள் இல்லை என்பதை உணரவேண்டும்
03. உலகத்தமிழர்களை அலட்சியமாய் அவமதிக்கக்கூடாது. யாவரும் நாம் தமிழர் என்ற குடைக்குள் ஒன்றுபடுவோம்



thanks - ஐரோப்பிய இளையோர் அமைப்பு





0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER