இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவு டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பெரு்மளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தாங்கள் சுட்டிக் காட்டும் நபர்களுக்கு எந்தவித கேள்வியும் கேட்காமல் வாக்கு அட்டைகளை வழங்குமாறு டக்ளஸ் கட்சியினர் தபால் அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முகாம்களில் இருக்கும் தமிழர்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான வாக்கு அட்டைகளை விநியோகித்து முறைகேடு நடப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. |
0 comments: