யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொழும்பில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (18) தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சின்னப்பு சுகிந்தா (21) இளம் பெண் கொழும்பு நகர்ப்பகுதியில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.
சுகவீனமுற்றுள்ள தனது தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்ற சுகிந்தா உணவு வாங்குவதற்காக வெளியில் சென்ற போது கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் மருதானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது தாயாரான சின்னப்பு சிவமணி (61) என்பவரை கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காகவே அவர் கொழும்பு வந்திருந்தார். அவர் தனது தாயாருடன் வைத்தியவாலையில் தங்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரை செல்லிட தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போது அதில் ஒரு ஆண் பேசுவதாகவும், பின்னர் சடுதியாக தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சின்னப்பு சுகிந்தா (21) இளம் பெண் கொழும்பு நகர்ப்பகுதியில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.
சுகவீனமுற்றுள்ள தனது தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்ற சுகிந்தா உணவு வாங்குவதற்காக வெளியில் சென்ற போது கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் மருதானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது தாயாரான சின்னப்பு சிவமணி (61) என்பவரை கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காகவே அவர் கொழும்பு வந்திருந்தார். அவர் தனது தாயாருடன் வைத்தியவாலையில் தங்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரை செல்லிட தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போது அதில் ஒரு ஆண் பேசுவதாகவும், பின்னர் சடுதியாக தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments: